இந்தியாவில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் முன்னணி பொதுத்துறை வங்கியான யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகள், தங்களது வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குக்கான வட்டி விகிதத்தை மாற்றி நவம்பர் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி,
- ரூ. 50 லட்சம் வரையிலான சேமிப்பு தொகைக்கு 2.75 சதவீத வட்டி விகிதமும்,
-
ரூ. 50 லட்சம் முதல் ரூ. 100 கோடி வரையிலான சேமிப்பு தொகைக்கு 2.90 சதவீத வட்டி விகிதமும்,
-
ரூ.100 கோடி முதல் ரூ.500 கோடி வரையிலான சேமிப்புத் தொகைக்கு 3.10 சதவீத வட்டி விகிதமும்,
-
ரூ 500 கோடி முதல் ரூ. 1000 கோடி வரை உள்ள இருப்புத் தொகைக்கு 3.40 சதவீத வட்டி விகிதமும்,
-
ரூ.1000 கோடிக்கு மேல் சேமிப்பு தொகைக்கு 4.00 சதவீத வட்டியும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.