அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு, இந்தியா உட்பட 70 நாடுகளில் வாடகை கார் சேவையை தொடர்ந்து செயல்பட்டு வரும் நிறுவனம் தான் ஊபர் (Uber). இதனை தொடர்ந்து உணவு வினியோகத்திலும், சரக்கு போக்குவரத்திலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஊபர் இந்தியா நிறுவன தலைவர் பிரப்ஜீத் சிங் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதில் இந்தியாவில் வாடகை கார் சேவையை தொடங்கி 10 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, எங்கள் நிறுவனத்தில் ஆரம்பத்தில் இருந்து வேலை பார்த்த டிரைவர்களின் குழந்தைகளில் 1000 பேருக்கு ஆரம்ப கல்வியில் இருந்து முதுநிலை கல்வி வரை ஆகும் செலவை எங்கள் நிறுவனம் ஏற்று கொள்கிறது. இதில் பள்ளி கல்வி கட்டணம் முதல் தேவையான உபகரணங்கள் மற்றும் இணைய சேவை உட்பட அக்குழந்தைகளின் கல்விக்கு தேவைப்படும் அனைத்து செலவுகளும் இதில் அடங்கும் என தெரிவித்துள்ளார். இது அந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் 7,250 மதுபாட்டில்கள் ஒரே நேரத்தில் அழிப்பு?? வைரலாகும் வீடியோ!!!