இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஒரு நாள் உலக கோப்பை தொடரில், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை தவிர்த்து மற்ற அனைத்து அணிகளும் தலா 2 போட்டிகளை விளையாடி உள்ளன. இந்த போட்டிகளின் முடிவில், நியூசிலாந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 2 போட்டியையும் வென்று தலா 4 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளன.
Enewz Tamil WhatsApp Channel
இதில் இந்திய அணியை பொறுத்த வரையில், விராட் கோலி 2 போட்டிகளிலும் அரைசதத்திற்கு மேல் அடித்து அசத்தி உள்ளார். அதாவது, விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 85 ரன்களும், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 55* ரன்களும் எடுத்துள்ளார். இதன் மூலம், ஒருநாள் மற்றும் டி20 யின் உலகக் கோப்பை வரலாற்றின் அதிக ரன்கள் எடுத்தவர்களில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். அதாவது, உலக கோப்பையில் சச்சின் 2278 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது விராட் கோலியோ 2279* ரன்கள் எடுத்து இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
உலக கோப்பையில் அனல் பறக்க காத்திருக்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி…, வைரலாகும் ப்ரோமோ உள்ளே!!