இந்தியாவில் பள்ளி மாணவர் முதல் படித்த இளைஞர்கள் வரை தேர்வுகளின் போது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதனால் எந்தவித பதற்றமும் இல்லாமல் தேர்வுகளை மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி “தேர்வு வாரியர்ஸ்” என்ற புத்தகத்தை எழுதினார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
கடந்த மாதம் இப்புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அதன் பிறகு இந்த புத்தகத்தை பலரும் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்நிலையில் இப்புத்தகத்தை படித்ததன் மூலமாக ஜார்கண்ட் மாநில பள்ளி மாணவர்களுக்கு தேர்வு குறித்த பயம் விலகியுள்ளதாக மத்திய கல்வி இணை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் ட்வீட் அளித்த மோடி, “தேர்வு குறித்த எந்தவித மன உளைச்சலுக்கும் மாணவர்கள் ஆளாகி விட கூடாது என்பதே இப்புத்தகத்தின் நோக்கம். எனவே இதன் பலன் குறித்து மாணவர்கள் கூறியது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.