திருச்சியில் ஒரு ஆட்டுக்குட்டி “சார் எங்க அம்மா மற்றும் அண்ணனை கண்டுபுடுச்சி குடுங்க” என்று கலெக்டரிடம் மனு அளித்துள்ள காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
ஆடுகளை காணவில்லை
திருச்சியிலுள்ள உறையூர் காசிசெட்டி தெருவை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் ஒரு விவசாயி. இவர் 3 ஆடுகளை வளர்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் 2 ஆடுகளை ராத்திரி நேரத்தில் யாரோ திருடி விட்டனர். அதை தொடர்ந்து உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுப்பது போல் தெரியவில்லை. இப்புகார் தொடர்பாக சரவண குமார் ஆன்-லைன் பரிசோதித்துள்ளார். அப்பொழுதும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே அவர் மீண்டும் புகார் மனு அளித்துள்ளார். அதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கலெக்டர் மனு
இதில் விரக்தி அடைந்த சரவண குமார் மாவட்ட கலெக்டர்க்கு ஆடு எழுதுவது போல் மனு எழுதினார். அதில் “என் அம்மாவையும், அண்ணனையும் மீட்டுத்தாருங்கள்” என்று எழுதி இருந்தது. அந்த ஆட்டுக்குட்டி மிகவும் அழகாக இருந்தது. மனு கொடுக்க அவர் ஆட்டுக்குட்டியுடன் வரிசையில் நின்றபோது அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனை அறிந்த கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |