தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் பூட்டு – கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்..!

0
TASMAC
TASMAC

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் வரும் மார்ச் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஆய்வுக் கூட்டம்:

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக தமிழகத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து மூன்றாவது முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கேஜி முதல் 5ம் வகுப்புகள் வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.

தற்போது அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை வரும் மார்ச் 31ம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அதிகளவில் கூட வேண்டாம், திருமண நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here