வட மாநிலங்களில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரு மாதக்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை உயர்ந்து கொண்டே வந்தது . ஒரு கிலோ ரூ. 150 வரை உயர்ந்த இந்த தக்காளியின் விலை தற்போது சராசரி விலைக்கு திரும்பி உள்ளது. அதாவது, நாட்கள் செல்ல செல்ல தக்காளியின் வரத்து அதிகரிப்பதால் அதன் விலையும் படிப்படியாக குறைய தொடங்கி உள்ளது.
முதல் வெற்றியை பெற போவது யார்?? ஹைதராபாத் அணியை எதிர்கொள்ளும் கொல்கத்தா!!
நேற்று, சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ. 25 க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 11 ரூபாய் குறைந்து, தற்போது ரூ. 14 விற்பனையாகி வருகிறது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் நேற்று ஒரு கிலோ ரூ. 30 க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று 14 ரூபாய் குறைந்து 16 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வரும் வாரங்களில் தக்காளியின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.