கொரோனா நோய் பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஐடி துறை நிறுவனங்களின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பை இழந்து கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இந்த சூழலில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டில் ஐடி துறை மீண்டும் வளர்ச்சி பெறும் என கூறப்படுகிறது.
TNUSRB தேர்வர்களே.., தேர்வில் பாஸ் ஆவதற்கு சூப்பரான வழி இது தான்.., மிஸ் பண்ணிடாதீங்க!!
இதற்கேற்ப இந்தியாவில் மிகச் சிறந்த ஐடி நிறுவனங்களில் ஒன்றான டிசிஎஸ் (Tata Consultancy Services) 10,000 Freshers-க்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். அதுவும் ஐடி மேஜர் கொண்ட சிறந்த பொறியியல் கல்லூரிகளில் இருந்து தேர்வு செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ஐடி படித்த பல இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.