மூன்றாம் பாலினத்தவர்களாக அறியப்படும் திருநங்கைகள் மிகுந்த போராட்டத்திற்கு பிறகே தங்களின் தனித்திறமைகளை உலகறிய செய்கின்றனர். தற்போது இவர்கள் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலுள்ள போக்குவரத்து சிக்னல்களில் திருநங்கைகள் யாசகம் பெற போக்குவரத்து போலீசார் தடை விதித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
TNUSRB தேர்வர்களே.., தேர்வில் பாஸ் ஆவதற்கு சூப்பரான வழி இது தான்.., மிஸ் பண்ணிடாதீங்க!!
திருநங்கைகள் யாசகம் எடுப்பது பலருக்கும் இடையூறாக இருப்பதாக காவல்துறைக்கு தொடர்ந்து புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் திருநங்கைகள் யாசகம் பெற போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் தடையை மீறினால் சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.