தினந்தோறும் பணி, கல்வி, சுற்றுலா போன்ற இடங்களுக்கு செல்வதற்காக ஏராளமான பயணிகள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் பயணிகளுக்கு போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் எனவும், அவர்கள் பயணத்தின் போது எந்த ஒரு சிரமத்தையும் அனுபவிக்க கூடாது எனவும் தெற்கு ரயில்வே பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் இப்போது ரயிலில் செல்லும் போது ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதை உடனடியாக போன் கால் மூலம் தெரிவித்தால் அனைத்து பிரச்சனைகளும் தீர்த்து வைக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அதாவது நாம் ரயிலில் பயணம் செய்யும்போது ஏதேனும் ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் உடனடியாக 1512 என்ற நம்பருக்கு புகார் அளிக்கலாம். மேலும் ரயிலில் சுத்தமின்மை, அழுக்காக இருந்தால் பயணிகள் உடனே 58888 எண்ணுக்கு PNR ஐ இணைத்து SMS செய்தால் உடனடியாக சரிசெய்யப்படும்.