இந்த வருடம் ஜூலை மாதம் டோக்கியோவில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டி கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ரத்தாக வாய்ப்பு உள்ளது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பீதி!!
கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதற்கு இடையே , ஜப்பானின் டோக்கியோவில், ஜூலை 24 முதல் ஆக., 9 வரை நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டி கொரோனா வைரஸ் பரவலால் ரத்தாகும் வாய்ப்பு உள்ளது என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிதெரிவித்துள்ளது
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவிப்பு!!
இந்த ஆண்டு நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படுவதற்கோ அல்லது தேதி மாற்றி வைக்கவோ வாய்ப்பில்லை. எனவே வரும் மே மாதத்திற்குள் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் வரவிட்டால் இந்தாண்டு ஒலிம்பிக் ரத்தாக வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |