சீனாவைத் தொடர்ந்து கொரியா, இத்தாலியை மிரட்டும் கொரோனா வைரஸ் – 2500ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!

0

சீனாவின் ஹவான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் (கோவிட் 19) இதுவரை 27 உலக நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் மட்டும் கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,592 ஆக உள்ளது.

சீனாவின் உயிரி ஆயுதமா..?

சீனாவின் ஹவான் நகரில் உள்ள இறைச்சி கடையில் இருந்து தோன்றியதாக கூறப்படும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. கொரோனா வைரஸானது சீனாவின் உயிரி ஆயுத தயாரிப்பு ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து பரவியதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. இந்த வைரசானது ஒரு நபரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவக் கூடிய தன்மை உடையது.

சீனாவில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,150 ஐ தாண்டி உள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 2,592 ஆக உள்ளது. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இத்தாலி, கொரியாவிலும் பாதிப்பு..!

இதுவரை 27 உலக நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் தென் கொரியா மற்றும் இத்தாலியில் அதிகரித்து உள்ளது. தென் கொரியாவில் இதுவரை கொரோனா வைரஸினால் 763 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 7 பேர் இதுவரை உயிர் இழந்துள்ளனர்.

இத்தாலியில் இதுவரை 152 பேருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here