கொரோனா காரணமாக 2020ஆம் ஆண்டு நடைபெற இருந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த ஒலிம்பிக் தொடர் இந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று டோக்கியோ ஒலிம்பிக் நிர்வாக குழு தற்போது அறிவித்துள்ளது.
2020-ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ மாகாணத்தில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா எதிரொலியால் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற எதிர்ப்பு வலுத்த நிலையில் அந்நாட்டின் 80 சதவீத மக்கள் இந்த போட்டிகள் நடைபெறுவதை விரும்பவில்லை என்பது புதிய கருத்து கணிப்பு மூலம் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த போட்டிகள் ஜூலை 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஜப்பானில் நடைபெற உள்ளது. மேலும் தொற்று பரவல் காரணமாக அந்த போட்டிகளை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் நிர்வாக குழு ஒரு அறிவிப்பை அறிவித்து அந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அதாவது 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பார்வையாளர்கள் போட்டிகளை காண அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்து உள்ளது. மேலும் தற்போது நடைபெற உள்ள இந்த தொடர் 32-வது ஒலிம்பிக் போட்டி தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்