வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்நிலையில் வானிலை மையம் தமிழகத்தில் நாளை நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி , திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஓணம் பண்டிகையை கொண்டாடிய கிரிக்கெட் நட்சத்திரம்…, இணையத்தில் வைரலாக பரவும் போட்டோ உள்ளே!!