தென்மேற்கு பருவமழை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், வட மாநிலங்கள் சில பகுதிகளில் வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எல்லையோர மாவட்டங்களான கோவை, நீலகிரியிலும் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சில மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடை காலை 7 மணி முதல் திறப்பு? மதுபிரியர்கள் குஷி!!!
மேலும், அடுத்த 6 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை அறிந்த விவசாயிகள் சந்தோஷம் அடைந்து வருகின்றனர்.