தமிழகத்தில் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக எஸ்.முத்துசாமி பொறுப்பேற்றது முதல் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி, கல்லூரிகள் அருகாமையில் உள்ள மற்றும் அதிகமான புகார்களை பெற்ற 500 மதுபான கடைகள், கடந்த மாதம் மூடப்பட்டது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதன் காரணமாக டாஸ்மாக் தினசரி விற்பனையில் 25 சதவீதம் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களை போல் மதுபானங்களை பாட்டிலுக்கு பதிலாக கடினமான டெட்ரா பேப்பர் அட்டையில் விற்பனை செய்வதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எஸ்.முத்துசாமி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் மதுபான விற்பனையை காலை 7 மணி முதல் 9 மணி வரை நடத்த ஆலோசிப்பதாகவும் தகவல் தெரிவித்து இருந்தனர். இருந்தாலும் இது கற்பனையான செய்திகளே, அதனை வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.