தமிழகத்தில் கடந்த சில தினங்களாக சில முக்கிய பகுதிகளில் மிதமான முதல் கனமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அணையில் நீர் நிரம்பி வெளியேறி வருவதால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் வருகிற ஜூலை 11 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது. மேலும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.