தமிழக மக்களே.,  இந்த நாளில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.,  வானிலை மையம் எச்சரிக்கை!!

0
தமிழக மக்களே.,  இந்த நாளில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.,  வானிலை மையம் எச்சரிக்கை!!
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் சில பகுதிகளில் கடும் பனி மக்களை உறைய வைத்திருந்தது. இதனால் விமான சேவை பாதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கிழக்கு திரையில் ஏற்பட்டுள்ள காற்றின் வேறுபாடு காரணமாக  இன்று வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் நாளை முதல் 2.02.2024 தேதி வரை தமிழகம், புதுவை,  காரைக்கால் உள்ளிட்ட பகுதியில் வறண்ட வானிலை நிலவ கூடுமாம். மேலும் இதற்கிடையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது போக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் உறைபனிக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here