இத்தாலி நாட்டில் உள்ள ஓர் அடுக்கு மாடி வீட்டில் திருமண வரவேற்பு விழா கோலாகலமாக அரங்கேறி வந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியின் போது நடனமாடி கொண்டிருந்த மணமக்கள் மற்றும் உறவினர்கள் திடீரென 25 அடி ஆழப் பள்ளத்திற்குள் விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இதையடுத்து தகவலை அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் தரைத்தளத்தில் இருந்த மேற்கூரை சரிந்து விழுந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். தற்போது மணமக்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
டேய்.., என் பொண்ண தேட நீ யாரு.., கதிரை புண்படுத்திய குணசேகரன்.., கதறி அழும் ஜனனி!!!