எதிர்நீச்சல் சீரியலில் இப்போது அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு பக்கம் ஈஸ்வரி, நந்தினி, சக்தி எல்லோரும் தர்ஷினியை தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் இதை எதையுமே கண்டுக்காமல் குணசேகரன் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைகளை செய்கிறார். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் விசாலாட்சி இவன் என் புள்ளையே கிடையாது. நந்தினியின் புருஷன் என்கிறார். அந்த நேரத்தில் கதிர் கோபப்பட்டு விசாலாட்சியை சத்தம் போடுகிறார்.
மேலும் என் புள்ளைய எப்படி தேடணும்னு எனக்கு தெரியும். நானே தேடி கண்டுபிடிப்பேன் என்று சொல்கிறார். இதை கேட்ட குணசேகரன் நீ யாரு என் புள்ளைய கண்டுபிடிக்க என கதிர் மனம் நோகும்படி பேசுகிறார். இந்த பக்கம் போலீஸ் சொன்ன விஷயத்தை கேட்டு ஜனனி எல்லோரும் அதிர்ச்சியாகின்றனர். பின் போலீஸ் சொன்ன இடத்துக்கு சென்று பார்த்தால் அங்கு ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இது தர்ஷினியா என ஜனனி பார்க்கிறார். பின் எதுவும் சொல்லாமல் எல்லோரும் கதறி அழுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது அது தர்ஷனியாக இருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று தான் தெரிகிறது.