தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் இப்போது இரு தினங்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வானிலை மையம் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் காரைக்கால், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையின் முக்கிய இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் உஷாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை உள்ளிட்ட விமான வழித்தடங்களில் கட்டண உயர்வு., விலை எவ்ளோன்னு தெரியுமா?