நாடு முழுவதும் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவை பொதுமக்கள், தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பிக்க உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெரும்பாலானவர்களுக்கு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 12) முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் தங்கி பணிபுரிபவர்கள் பலரும் பேருந்து, விமானம் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதனால் விமானங்களில் முன்பதிவு மளமளவென தீர்ந்து வருவதால், விமானக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அதன்படி ரூ.3000 மதிப்புள்ள டிக்கெட் ரூ.10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொச்சி வழித்தடங்களில் கட்டணம் ரூ.14,000 ஆக அதிகரித்துள்ளது. இது தவிர மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி செல்லும் விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.