தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் வெளியே வரவே சிரமப்பட்டனர். மேலும் வெயிலினால் குழந்தைகளுக்கு தொற்று வந்துவிட கூடாது என்பதற்காக மாணவர்களுக்கு வழக்கத்திற்கு மாறாக விடுமுறை கொடுக்கப்பட்டது. மேலும் வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக ஆங்காங்கே சில இடங்களில் மிதமான மழை பெய்து வந்தது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது இன்று மழை பெய்யும் பகுதிகள் குறித்து வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
பாலியல் தொல்லையால் கர்ப்பமான சிறுமிகளுக்கு புதிய சட்டம்.., ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு!!
அதுமட்டுமின்றி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் சில குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்தது.