தெலுங்கு சூப்பர் ஸ்டாராக டோலிவுட்டை கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் சீரஞ்சீவி. அவருடைய தம்பி நாக பாபுவின் மகளான நடிகை நிஹாரிகா விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் நடித்ததன் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். ஒரு சில படங்களில் நடித்து வந்த அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் சீரியல் பக்கம் இறங்கி தற்போது நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்கிடையில் சைதன்யா என்பவரை காதலித்து கடந்த 2020ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவரின் திருமணத்தை சிரஞ்சீவி குடும்பத்தினர் தான் கோலாகலமாக நடத்தி வைத்தனர். இப்படி இருக்க கடந்த சில மாதங்களாக நிஹாரிகாவுக்கும் சைதன்யாவுக்கு பிரச்சனை இருந்ததாகவும், அதனால் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் சொல்லப்பட்டது.
இதுகுறித்து நிஹாரிகா தரப்பிலிருந்து எவ்வித தகவலும் வெளியாகாமல் இருந்தது. ஆனால், தற்போது இருவருமே சட்ட ரீதியாக பிரிந்துவிட்டார்களாம். அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்தி உறுதியானதும், நடிகை நிஹாரிகா தனது இன்ஸ்டாவில் உள்ள திருமண போட்டோக்களை டெலிட் செய்துள்ளார். இந்தச் சம்பவம் தெலுங்குத் திரையுலகில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.