தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில் அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளதால் கோடை வெயில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தால் அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் சேர்ந்து மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருச்சி, கரூர் தருமபுரி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |