ரயில்களில் பயணம் செய்ய இந்த செயலி உங்கள் மொபைலில் கட்டாயம் – ரயில்வே அமைச்சகம்

0

இந்தியாவில் இன்று (மே 12) முதல் சிறப்பு பயணியர் ரயில் பல்வேறு விதிமுறைகளுடன் இயக்கப்படுகிறது. இதில் பயணம் செய்பவர்கள் மத்திய அரசின் ‘ஆரோக்ய சேது’ செயலியை தங்கள் மொபைலில் கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

ஆரோக்ய சேது செயலி:

இந்தியாவில் 40 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவால் பயணியர் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று தொடங்கப்பட்ட பயணியர் ரயில் சேவையில் ஆன்லைன் மூலமே டிக்கெட் முன்பதிவு, உடல் வெப்பநிலை சோதனை என பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டு உள்ளது. இதில் பயணம் செய்பவர்கள் தங்களது மொபைலில் கட்டாயம் ஆரோக்ய சேது செயலியை கட்டாயம் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை தொடக்கம் – இந்திய ரயில்வே வெளியிட்ட அட்டவணை இதோ..!

ரயில் பயணத்திற்காக மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளில் ஆரோக்ய சேது கட்டாயம் என்பது தெரிவிக்கப்படவில்லை. ஆனால் டிக்கெட் முன்பதிவு செய்ய மொபைல் போன் கட்டாயம் என்பதால் அனைவரிடமும் மொபைல் இருக்கும் எனவே செயலியை கட்டாயம் தங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here