கதிரை வாய்க்கு வந்தபடி திட்டிய மூர்த்தி., மீண்டும் வெடித்த பிரச்சனை! புதிய திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

0
கதிரை வாய்க்கு வந்தபடி திட்டிய மூர்த்தி., மீண்டும் வெடித்த பிரச்சனை! புதிய திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!
கதிரை வாய்க்கு வந்தபடி திட்டிய மூர்த்தி., மீண்டும் வெடித்த பிரச்சனை! புதிய திருப்பத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ், ஹோட்டல் கடைக்கு சீல் வைத்த விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய எபிசோடில் தனம், முல்லையிடம் ஹோட்டலை நினைத்து கவலைப்படாதே என்று கூறுகிறார். பின் முல்லை சென்ற பிறகு தனம், கதிரிடம் எல்லாம் சரியாயிடும் என்று ஆறுதல் கூறுகிறார். கதிர் முல்லையிடம் ” நம்ம பேசுறது குழந்தைக்கு கேட்கும். அதனால் சந்தோசமான விஷயங்களை நினைச்சுக்கோ ” என்று அறிவுரை கூறுகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின்னர் மூர்த்தி குடும்பத்தில் அனைவரிடமும் ஆதங்கத்தில் கத்துகிறார். கதிரிடம் ” நீதானா ஹோட்டலை பார்த்துக்கணும், பொண்ணுங்கட்ட எதுக்கு எல்லாத்தையும் கொடுத்த? அனுபவம் இல்லாதனால தான் இப்டிலாம் நடக்குது ” என்று கூறி சென்று விடுகிறார். பின் அனைவரும் மூர்த்தி ஏன் இப்படி பேசுகிறார் என்று யோசிக்கின்றனர். தனம் கதிரிடம் ” நாங்க நல்லபடியாகதான் பார்த்தோம், ஏன் இப்படி நடந்துச்சு ” என்று வருந்துகிறார். பின் மீனா ” யாராவது நமக்கு தொழில் எதிரிகள் யாராவது இதை வேணும்னே செஞ்சுருப்பாங்க ” என்று கூறுகிறார்.

கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறாங்க., வாழ்க்கையே வெறுத்துருச்சு – பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் கதறல்!!

பின் அனைவரும் உட்கார்ந்திருக்கின்றனர். கண்ணன் மூர்த்தியை முறைத்துக்கொண்டே இருக்கிறார். மூர்த்தி என்னவென்று கேட்டதற்கு ஒண்ணுமில்லை என்று கூறுகிறார். பின் மூர்த்தி கதிரிடம் ” முல்லை எங்கே கூட்டிட்டு வா” என்று கூறுகிறார். பின் கதிர் கூட்டிவருகிறார். மூர்த்தி முல்லையிடம் “நீயே இப்போதான் மா ரொம்ப நாளைக்கு பிறகு குழந்தை உண்டாகியிருக்கிற, உங்களை ஹோட்டலுக்கு வெளியே பார்த்ததும் கஷ்டமாயிருச்சு அதான் கத்தி பேசிட்டேன் ” என்று கூறுகிறார். இதோடு இன்றைய எபிசோட் நிறைவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here