குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் பல கட்டங்களாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடமாநிலங்களிலும், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் தேதிகளையும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
மேலும் பிப்ரவரி 16ம் தேதி திரிபுரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் பிரச்சாரங்கள் களைகட்ட தொடங்கியது. இதனால் பண பட்டுவாடா, போதைப்பொருள் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க துணை ராணுவ வீரர்கள் திரிபுரா மாநில பாதுகாப்பு பணிகளில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் கல்வி படிப்போடு இதற்கும் தயாராக வேண்டும்.., அமைச்சர் உதயநிதி வலியுறுத்தல்!!!
இதைத்தொடர்ந்து திரிபுரா சட்டசபை தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தவாறு ஓட்டு போட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என திரிபுரா மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் எனவும் கூறியுள்ளனர்.