தொடர்ந்து குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது, மக்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
ஏற்றம் மற்றும் குறைவு:
கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பங்குச்சந்தை நிலவரத்தை போல் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதிலும் உச்சகட்டமாக சவரனுக்கு 43,000 ரூபாய் என்று விலை நிர்ணைக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த கவலைக்கு உள்ளாகினர். இனி தங்கம் வாங்குவது கனவில் தான் முடியுமோ என்று தோன்றும் அளவுக்கு இருந்தது. ஆனால், மக்கள் மனதில் பால் வார்க்கும் விதமாக கடந்த 8 ஆம் தேதியில் இருந்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ஏறிய வேகத்தில் இறங்கவில்லை என்று சொன்னாலும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. அதிலும் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக குறைந்து வந்தது. பின், மீண்டும் ஏற்றம் மற்றும் இறக்கம் என்ற நிலையில் இருந்து வந்ததால் மக்கள் குழப்பம் அடைந்தனர். இன்று கவலையை ஏற்படுத்தும் வகையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
இன்று தங்கத்தின் விலை சற்று கூடுதலாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்து 39,632 ரூபாய் என்று சென்னையில் ஆபரண தங்கம் விற்கப்படுகிறது. அதே போல் கிராம் ஒன்றிற்கு 27 ரூபாய் உயர்ந்து 4,954 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட மத்திய அமைச்சர் அமித் ஷா – இன்று வீடு திரும்பினார்!!
இதனால் மக்கள் மீண்டும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தங்க விலை தான் இப்படி உள்ளது என்று பார்த்தால் வெள்ளியின் விலையும் சத்தமில்லாமல் கூடியுள்ளது. இன்று கிராமுக்கு 3.70 காசுகள் உயர்ந்து 75.10 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ வெள்ளி 75,100 என்று சென்னையில் விற்கப்படுகிறது.