கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தொழில் துறைகளில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவு கவனம் செலுத்தியதால் அதற்கான தேவை பன்மடங்கு உயர்ந்தது. இதன் விளைவாக விலையும் வரலாறு காணாத அளவு அதிகரித்தது. கடந்த ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 43 ஆயிரம் ரூபாயை தாண்டி அதிர்ச்சி அளித்தது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் இம்மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை சற்று குறைந்து வருகிறது. இன்றும் இதுவரை இல்லாத அளவு ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 65 ரூபாய் குறைந்து ரூ.4,850 க்கும், ஒரு சவரன் ரூ.520 குறைந்து ரூ.38,880 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையும் பெருமளவு குறைந்து உள்ளது. இன்று சில்லரை வணிகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.4.50 குறைந்து ரூ. 64.30 க்கும், ஒரு கிலோ 64,300 ரூபாயாகவும் உள்ளது.