கொரோனா காரணமாக திரையுலகை சேர்ந்தவர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தூள் மற்றும் கில்லி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த ரூபன் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இது திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
கொரோனாவால் மரணம்:
கொரோனா தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டறியப்படாத நிலையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த வருடம் திரையுலகை சேர்ந்த பல முக்கிய பிரபலங்கள் நம்மை விட்டுச் சென்றுள்ளனர். சுஷாந்த் சிங், வடிவேல் பாலாஜி என பல இழப்புகளை திரைத்துறை சந்தித்து வருகிறது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் தமிழ் திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவரும் எழுத்தாளருமான ரூபன் கொரோனா தொற்று ஏற்பட்டு நேற்று மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளார். விஜய் நடித்த கில்லி படத்தில் கபடி போட்டி நடுவராக நடித்திருப்பார் ரூபன். மேலும் தூள் படத்தில் டிடிஆர் வேடத்தில் நடித்திருப்பார். சிறு வேடத்தில் நடித்திருந்தாலும் இவரின் முகம் பரிட்சியமானதே. சில படங்களுக்கு கதை ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
ரூபனுக்கு தற்போது 54 வயதான நிலையில் நுரையீரல் புற்றுநோய் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை அவருக்கு அதிகப்படியான மூச்சு திணறல் ஏற்படவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருக்கு குழந்தைகள் இல்லை. இவரின் இறப்பிற்கு சினிமா துறையினர் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.