கொரோனா பாதிப்பால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தொடர்ந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சரியத் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். வரலாறு காணாத அளவு அதிகரித்து இருந்த தங்கத்தின் விலை மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தங்கத்தின் விலை:
உலக அளவில் கொரோனா பாதிப்பால் பல துறைகள் அடிமட்டத்திற்கு சென்ற பொழுதும் விலை மாறாமல் இருந்தே பொருள் தங்கம் தான். வரலாற்றில் ஒருமுறை கூட அதன் மதிப்பு குறைந்ததே இல்லை. இதனால் ஊரடங்கு காலத்தில் லாபகரமான முதலீட்டிற்காக தங்கத்தின் மீது கவனம் சென்றது. இதன் விளைவாக விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது. ஏற்கனவே வருமானம் இன்றி தவிக்கும் மக்கள் விலை உயர்வால் ஏற்கனவே திட்டமிட்டு இருந்த சுப நிகழ்ச்சிகளை கூட நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆம், வரலாறு காணாத உயர்வாக ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ஒரு சவரன் 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம், தற்போது ஒரு கிராம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகிறது. அந்த அளவிற்கு கடந்த காலங்களில் அதன் விலை விண்ணைத்தொடும் அளவிற்கு அதிகரித்து உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருவது சற்று நிம்மதி அளிப்பதாக உள்ளது.
சென்னையில் ஆகஸ்ட் 18 முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு – தமிழக அரசு அறிவிப்பு!!
இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 31 ரூபாய் குறைந்து ரூ.5,070க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.238 குறைந்து ரூ.40,560 க்கு விற்பனை ஆகிறது.