இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இன்று பிறந்தநாள் – குவியும் வாழ்த்துக்கள்!!

0

தென்னிந்திய சினிமாவின் இசைப்புயல் என்று அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தனது புது புது இசையினால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இசைப்புயல்:

இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் மற்றும் ஆஸ்கர் நாயகன் என்று அழைக்கப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் அனைத்து மொழிகளிலும் தனது இசை மூலம் ரசிகர்களை பிடித்துள்ளார். இவரது இசைக்கென்று தனி கூட்டமே உள்ளது. இவர் தனது 25 வயதிலேயே ஆஸ்கர் விருது பெற்று அசத்தியுள்ளார். இதற்கு இயக்குனர் பாலு மகேந்திரா முக்கிய காரணமாய் இருந்தார். ஏனென்றால் தேசிய விருதுக்கான இசையமைப்பாளர் தேர்வு குழுவில் பாலு மகேந்திராவும் இருந்தார்.

பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ரோஜா படமும் இசைஞானி இளையராஜாவின் தேவர் மகன் படமும் விருதுக்காக பரிசீலிக்கப்பட்டது. இந்நிலையில் பாலுமகேந்திரா தனது இரண்டு வாக்குகளை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கினார். காரணம் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரோஜா திரைப்படம் தான் முதல் படம் ஆகும். தனது முதல் படத்திலேயே இசைஞானி கூட போட்டி போட்டு வந்துள்ளார், மேலும் இந்த விருது அவர் எதிர் காலத்தில் அதிக விருது பெறுவதற்கு தொடக்கமாக அமைய வேண்டும் என்பதற்காக பாலு மஹிந்திரா தனது வாக்குகளை அளித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையில் வெளிவந்த சில பாடல்களில் இயற்கையின் சத்தங்களையும் சேர்த்து இசையமைத்துள்ளார். சான்றாக ரிதம் படத்தில் வரும் ‘நதியே நதியே’ பாடல் முழுவதும் தண்ணீர் சத்தம் கேட்கும். இது போல் தனது ஒவ்வொரு இசையிலும் இவர் வித்தியாசம் காட்டி வந்துள்ளார். இதனாலேயே இவரையும் இவரது இசையையும் ரசிகர்கள் விரும்பி வந்தனர்.

கருப்பு நிற சேலையில் கும்முனு போஸ் கொடுத்த வனிதா – கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!!

53 வது பிறந்தநாள் கொண்டாடும் இசைப்புயல்:

மேலும் இவர் சினிமாவில் நிறைய பாடகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். உன்னி கிருஷ்ணன், ஹரினி, சின்மயி, நரேஷ் ஐயர் மற்றும் சித் ஸ்ரீராம் ஆகியோர் தற்போது கொடிகட்டி பறப்பதற்கு காரணமே இவர் தான். தற்போது இசைப்புயல் இன்று தனது 53வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூகவலைத்தளங்களில் ஹேஷ்டேக் உருவாக்கி ரசிகர்கள் அதனை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here