தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்பு ஆகிய துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு அறிவிப்பை TNUSRB தேர்வாணையம் அறிவித்து வருகிறது. அந்த வகையில் உதவி ஆய்வாளர், நிலைய காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு, தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுதியவர்களுக்கு செப்டம்பரில் முடிவுகள் வெளியிடப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட தேர்வு வருகிற 2023 டிசம்பர் 10ஆம் தேதி நடத்த தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அழைப்பு கடிதமும் (Call Letter) தொகுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தை பார்வையிடலாம்.
TNUSRB Course Pack with Affordable Price – Click Here