தென்னிந்திய பகுதிகளில் கடந்த சில நாட்களாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் லேசான மழை முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது.