இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் தீவிர மோதல் நடைபெற்று வருவதால், இருதரப்பிலும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் நாட்டில் 1,400க்கும் மேலானோரும், காசாவில் 7,000க்கும் மேலானோரும் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால், காசா பகுதிகளில் உயிரிழப்புகள் மேலும் அதிகரித்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதன் காரணமாக காசாவில் நிவாரண பணிகளும் முடக்கப்பட்டுள்ளதால் மருத்துவம், உணவு போன்றவை கிடைக்காமல் பெரும்பாலானோர் அவதியுற்று வருகின்றனர். இஸ்ரேலின் இந்த கொடூர தாக்குதலுக்கு பல உலக நாடு தலைவர்களும் அதிருப்தி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.