அரசு துறை பணிகளுக்காக ஆட்களை தேர்தெடுக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தட்டச்சு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை ஒத்திவைத்துள்ளது. அதே போல் கலந்தாய்வு நடைபெறும் தேதியையும் மாற்றியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளில் உள்ள பணிகளையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தான் நிரப்புகிறது. தகுதி உடையவர்களை போட்டி தேர்வுகளின் வாயிலாக தேர்ந்தெடுக்கும் பணிகளை செய்து வருகின்றது. இந்த தேர்வாணையம் 1938 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் போல் தமிழக அளவில் செயல்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக போட்டி தேர்வுகளை ஒத்தி வைத்துள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தற்போது இந்த தேர்வாணையத்தின் தலைவராக டாக்டர் கே. அருள்மொழி உள்ளார். டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் மிகவும் முக்கியமான தேர்வு குரூப் 4 தேர்வுகள். இந்த தேர்வுகளில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர் கூட எழுதலாம். இந்த தேர்வுகள் தட்டச்சு பணியிடங்களுக்காகவும் நடத்தப்படுகின்றது. தட்டச்சு பணிகளுக்கான தேர்வுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்றது.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
இந்த தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நவம்பர் 25 மற்றும் 26 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், “நிவர்” புயல் காரணமாக தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் மற்றும் கலந்தாய்வுகள் டிசம்பர் மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை TNPSC தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.