தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) அமல்படுத்தப்படும் என உறுதி அளித்து இருந்தது.
ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையிலும், OPS-ஐ அமல்படுத்த தயக்கம் காட்டி வருவதாக பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (ஜன.30) வெளியிடப்பட்ட TNPSC “குரூப் 4” அறிவிக்கையில், தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் இல்லை என குறிப்பிட்டு இருந்ததாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் திமுக தேர்தல் வாக்குறுதி காற்றில் கரைந்ததா? எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அச்சுறுத்தும் ஜேஎன் 1 கொரோனா வைரஸ்., அதிகரிக்கும் உயிர் பலி., மத்திய சுகாதார துறை முக்கிய அறிவிப்பு