தமிழகத்தில் 5,240 பணியிடங்களுக்கான “குரூப் 2, 2A” போட்டித் தேர்வு அறிவிப்பை கடந்தாண்டு TNPSC தேர்வாணையம் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து முதல் நிலை தேர்வு முடிந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடத்தப்பட்டது. இதில் 55,071 தேர்வர்கள் கலந்து கொண்ட நிலையில், இதுவரையிலும் முடிவுகள் வெளிவராமல் பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த சூழலில் குரூப் 2, 2A தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 620 அதிகரித்து 5,860ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு தேர்வர்கள் உட்பட பலர் மத்தியில் வரவேற்பு அளித்து வந்தாலும் ரிசல்ட் எப்போது? வெளியிடப்படும் என்ற ஆவலும் அதிகரித்து வருகிறது.