தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் முதலாவது போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நாளை (டிசம்பர் 26) முதல் நடக்கிறது. இந்நிலையில் இந்த மைதானத்தின் வானிலை முன்னறிவிப்பின்படி ஆட்டத்தின் போது மழை குறுக்கிடாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதாவது செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில், வெப்பம் தான் அதிக அளவு காணப்படும். அந்த வகையில், அதனை ஆடுகளத்தின் தன்மையுடன் ஒப்பிட்டால் வேக பந்துவீச்சாளர்களுக்கு தான் சாதகமாக இருக்கும். இங்கு பந்து நன்றாக பவுன்ஸ் ஆகலாம். இதனால் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். எனவே ஆட்டம் நடைபெறும் 5 நாட்களிலும் மழை அச்சுறுத்தல் இருக்காது. இதன் காரணமாக இப்போட்டி தடையின்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.