இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த IPL திருவிழா கடந்த ஜூன் 30 ஆம் தேதியன்று முடிவுபெற்றது. இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி கோலாகலமாகத் துவங்கிய IPL போட்டிகள் சரியாக இரண்டு மாதங்கள் வரை நடைபெற்றது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக வெற்றி பெற்றதுடன் இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 5 ஆவது கோப்பையையும் கைப்பற்றியது.
இப்படி பல ஸ்வாரசியமான நிகழ்வுகளுடன் முடிவடைந்த IPL போட்டிகளைத் தொடர்ந்து, TNPL போட்டிகளை நடத்த இருப்பதாக தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய நிர்வாகம் அறிவித்தது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) போட்டிகள் ஜூன் மாதம் 12 ஆம் தேதியன்று துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது, TNPL போட்டிகளுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை நாளை மாலை 3 மணியளவில் துவங்க இருக்கிறது. இந்த ஆண்டு TNPL போட்டிகள் ஜூன் 12 ஆம் தேதி துவங்கி ஜூலை 12 ஆம் தேதி வரை 32 போட்டிகளாக நடைபெறுகிறது. இந்த போட்டிகள் கோவை, திண்டுக்கல், சேலம் மற்றும் திருநெல்வேலி போன்ற பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.