சமீப காலமாக உலகளவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், ஈகாமர்ஸ் நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்து வந்தன. இதற்கு, பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சொல்லப்பட்டது. இந்த பணிநீக்கங்கள் ஊழியர்களிடையே கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தாலும், நிறுவனங்களைப் பொறுத்தமட்டில் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருந்தது.
இப்படி இருக்க, சீனாவில் உள்ள பிரபல நிறுவனம் தனது ஊழியர் ஒருவரை விசித்திரமான செயலுக்காக பணிநீக்கம் செய்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதாவது, சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனத்தில் பணியாற்றி வந்த வாங் என்பவர் தனது வேலை நேரத்தில் தினசரி 6 மணிநேரத்தை கழிவறையில் செலவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
கிரிக்கெட் ரசிகர்களுக்கு தொடரும் கொண்டாட்டம்….,நாளை முதல் TNPL டிக்கெட் விற்பனை…..,
அதாவது, தனது உடல் நிலையை காரணம் காட்டி பல நாட்களாக கழிவறையில் வேலை நேரத்தை செலவிட்டதால் அவரை பணிநீக்கம் செய்து நிறுவனம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. இந்த நடவடிக்கைக்கு எதிராக வாங் வழக்கு தொடர்ந்த நிலையில், நிறுவனத்தின் முடிவு சட்டப்பூர்வமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.