வெளியூர்களுக்கு செல்வோர் கவனத்திற்கு….,இந்த வாரம் கூடுதலாக 2,200 பேருந்துகள் இயக்கம்….,

0
வெளியூர்களுக்கு செல்வோர் கவனத்திற்கு....,இந்த வாரம் கூடுதலாக 2,200 பேருந்துகள் இயக்கம்....,
வெளியூர்களுக்கு செல்வோர் கவனத்திற்கு....,இந்த வாரம் கூடுதலாக 2,200 பேருந்துகள் இயக்கம்....,

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில், தொடர்ந்து அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கோடை விடுமுறையை நீட்டிப்பதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் அறிவித்தது.

அந்த வகையில், வரும் ஜூன் 7 ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளும் மீண்டுமாக திறக்கப்பட இருக்கிறது. இப்போது, கோடை விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்பும் பயணிகளுக்கு வசதியாக கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்துறை முடிவு செய்துள்ளது.

கக்கூஸ் போனது ஒரு குத்தமாடா….,வேலையை பறித்த பிரபல நிறுவனம்….,

அந்த வகையில், கோவை, திருநெல்வேலி மற்றும் மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு வழக்கத்தை விட கூடுதலாக 2,200 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வார இறுதியில் சென்னைக்கு 900 சிறப்பு பேருந்துகளும், பெங்களூரு உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கு 1,300 பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here