தமிழகத்தில் இப்போது வடகிழக்கு பருவ காற்றின் வேக மாறுபாடு காரணமாக டிசம்பர் 30 முதல் ஜனவரி 1 வரை கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நாட்களில் குமரிக்கடல் மற்றும் தென் அரபிக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதனால் இந்த மூன்று நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். மேலும் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழகத்தின் சென்னை மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் அதிகாலையில் மூடுபனி இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., தேர்வில் வெற்றி பெற வேண்டுமா?? இத உடனே பண்ணுங்க!!!