இந்தியாவில் தொடர்ந்து மாறி வரும் பருவநிலை மாற்றம் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த வகையில், தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நகரின் முக்கிய பகுதிகளில் இன்று மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இதில், குறிப்பாக தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 10) இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு அறிவித்துள்ளது. அதாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ பயனாளர்கள் ஹேப்பி., 6 பெட்டிகள் கொண்ட ரயில்., எப்போது? வெளியான முக்கிய அறிவிப்பு !!!