சென்னையில் முதல் கட்ட மெட்ரோ பணிகள் முடிவடைந்து சென்ட்ரல் to பரங்கிமலை மற்றும் ஏர்போர்ட் to விம்கோ நகர் ஆகிய இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் 4 பெட்டிகள் கொண்ட 45 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவதால், அனுதினமும் 2.8 லட்சம் பேர் வரை பயனடைந்து வருகின்றனர். அதிலும் நெரிசல் மிகு நேரங்களிலும், வார இறுதி நாட்களிலும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இதையடுத்து ரூ.2,820.90 கோடி மதிப்பீட்டில் 6 பெட்டிகள் கொண்ட 28 ரயில்கள் கொள்முதல் செய்ய உள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதற்காக, பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் நிதி பெற்று, முதல் கட்டமாக 5 மெட்ரோ ரயில்களை வாங்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.