இந்தியாவில் ஒருநாள் உலக கோப்பை தொடரின் 13வது சீசன் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது முதல் போட்டியை சமீபத்தில் விளையாடியது. இதில், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணி, நாளை (அக்டோபர் 11) ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியிலேயே டெங்கு காய்ச்சல் பாதிப்பால் விளையாட முடியாமல் போன அதிரடி நாயகன் சுப்மன் கில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியையும் இழக்க உள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது, தற்போது டெல்லி சென்று உள்ள இந்திய அணியுடன் சுப்மன் கில் செல்லவில்லை. காய்ச்சல் பாதிப்பால் சென்னையிலேயே மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இதனால், இவர் அக்டோபர் 14 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாடுவது கேள்வி குறியாகி உள்ளது. இந்த வருட தொடக்க முதல் அதிரடியாக விளையாடி வந்த சுப்மன் கில் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் அனைவரது பிரார்த்தனையாக உள்ளது.