தென்னிந்தியாவை நோக்கி வரும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏற்பட கூடும் வானிலை மாற்றத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, இன்று (செப்டம்பர் 13) முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால், சென்னையை பொறுத்த வரையில் வானம் மேகமூட்டத்துடனே காணப்படுமே தவிர அவ்வப்போது நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்க கூடும். இந்த மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாட்டால், கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் இன்று (செப்டம்பர் 13) முதல் செப்டம்பர் 17 ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
‘நா ரெடி தான் வரவா’ பாடலை குஷியாக பாடிய பிரதமர் மோடி.., அட சூப்பரா பாடுறாரே – வைரலாகும் வீடியோ!!