#TNvsPUN விஜய் ஹசாரே ட்ராபி – தமிழ்நாடு அணிக்கு 289 ரன்களை இலக்காக வைத்த பஞ்சாப்!!

0

தற்போது தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணி தங்களது விஜய் ஹசாரே கோப்பைக்கான போட்டியை விளையாடி வருகின்றனர். இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 288 ரன்களை குவித்தது.

தமிழ்நாடு vs பஞ்சாப்:

தற்போது இந்தியாவில் வைத்து விஜய் ஹசாரே தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் அணிகள் விளையாடி வருகின்றனர். முதலில் டாஸ் வென்று தமிழ்நாடு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினார். அவரை தொடர்ந்து மந்தீப் சிங்க் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றினார். அதன்பின்பு பஞ்சாப் அணியின் சிம்ரன் சிங்க் மற்றும் சிங்க் மன் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இருவரும் தமிழ்நாடு அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு வந்தனர். இவர்களை பிரிப்பது தமிழ்நாடு அணிக்கு பெரிய தலைவலியாகவே இருந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இவர்கள் இருவருமே அரைசதத்தை கடந்து அசத்தினர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 71 ரன்கள் எடுத்த நிலையில் சிம்ரன் சிங்க் ஆட்டமிழந்தார். அதன்பின்பு சிங்க் மன் மற்றும் சன்விர் சிங்க் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியும் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியலில் புது நாயகி – யார் தெரியுமா??

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிங் மன் சதம் அடித்து அசத்தினார். தற்போது 50 ஓவர் முடிவில் சிங்க் மன் 139 ரன்கள் மற்றும் மொல்ஹோத்ரா 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழகலாம் உள்ளனர். இதன்மூலம் பஞ்சாப் அணி 288 ரன்களை குவித்தது 4 விக்கெட்டை இழந்துள்ளது. தமிழ்நாடு அணி தரப்பில் சாய் கிஷோர் மற்றும் பாபா அபராஜித் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். தற்போது தமிழ்நாடு அணி 50 ஓவருக்கு 289 ரன்கள் எடுத்தல் வெற்றி அடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here