நாடு முழுவதும், தமிழகத்தில் 9 தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 60% வரை கட்டணத்தை குறைக்க முடிவு செய்திருப்பதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
மாநிலம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், மத்திய அரசின் சார்பாக சுங்க கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணத்தை ஒப்பந்தத்தின் அடிப்படையில், அரசு வசூல் செய்து வருகிறது. சமீப நாட்களாக, வாகன ஓட்டிகளின் சிரமத்தை போக்க பாஸ்ட் டேக் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தியது. இருந்தாலும் இந்த கட்டணத்தை அரசு குறைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், மத்திய அவையில் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(19.11.2022) – முழு விவரம் உள்ளே!!
அதாவது நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணத்தை 40% வரை குறைக்க உள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள 9 சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 60% வரை குறைக்க உள்ளதாக உறுதியளித்துள்ளார். இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.